பக்கங்கள்

பார்வை

திங்கள், 6 மே, 2013

வாழும்வரை வாழ வழிவிடு


மாறிக் கொண்டிருக்கும்
காலங்களில்
ஆறிக் கொண்டிருக்கும்
காயங்களில்
கீறிக் கொண்டிருக்கும்
சில கூர் முனைகளைத் தாண்டி
பேசிக் கொண்டிருக்கும்
என் மூச்சு
இன்றும் நின்றுவிடலாம்
ஆகவே
வாழும்வரை வாழ
வழிவிடு என்கிறேன் நீயோ
வலிகளை என் மீது
வாரி எறிகிறாய்
என் சமூகமே.

இதயச் சுவர்களுக்கு எத்தனை வலிமை
இன்னும் வெடிக்காமல் துடிக்கிறது
துன்பங்களை கைது செய்ய நினைத்து
பின் சிரிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.